Fact Check: திருப்பரங்குன்றத்தில் திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிட புதிய சட்டமா? வைரலாகும் செய்தியின் பின்னணி என்ன

இஸ்லாமியர்கள், திருப்பரங்குன்றத்தில் ஆடு கோழி பலியிட புதிய சட்டம் ஏற்றவுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்ததாக சமூக வலைதளங்களில் சன் நியூஸ் ஊடகத்தில் நியூஸ் கார்ட் வைரலாகி வருகிறது

By Newsmeter Network
Published on : 29 March 2026 1:21 AM IST

Fact Check: திருப்பரங்குன்றத்தில் திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிட புதிய சட்டமா? வைரலாகும் செய்தியின் பின்னணி என்ன
Claim:திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிடப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாகப் பரவும் சன் நியூஸ் கார்டு
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது, அவ்வாறாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.


Fact-Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்று தெரியவந்தது.

இந்தத் தகவல் குறித்து உண்மைத்தன்மையை அறிய இதுதொடர்பாக தேடினோம். அப்போது, முதலாவதாக திமுக சார்பில் வரவிருக்கும் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்தது. ஏப்ரல் 2 ஆம் தேதிதான் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்றும் அதன் பின்னரே முதலமைச்சர் தனது பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் விகடன் ஊடகத்தின் செய்தி தெரிவிக்கின்றது.


இதனைத்தொடர்ந்து வைரலாகும் நியூஸ்கார்டானது சன் நியூஸ் ஊடகத்தின் லோகோவுடன் இருப்பதால் இதுபோன்றதொரு நியூஸ் கார்டை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடியபோது அவ்வாறாக எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக, திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்ச்சை நிறைவேற்றுமாறு புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று தெரியவந்தது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது, அவ்வாறாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை
Next Story