அமெரிக்க நீதித்துறை ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தக் கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. வைரலான படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.
இப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய ராகுல் காந்தியின் படத்தை கூகுள் டீப் மைண்ட் சின்த்ஐடி டிடெக்டரைப் பயன்படுத்தினோம். அந்தக் கருவி, படம் சின்த்ஐடியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்தியது.
மேலும், கூர்ந்து கவனித்தால், முகங்கள் சேர்க்கப்பட்ட கழுத்துப்பகுதியைச் சுற்றி ஒளிவட்டம் மற்றும் மங்கலான தோற்றம் காணப்பட்டது. முகங்களில் உள்ள வெளிச்சமும் அறைக்கு பொருந்தவில்லை. இவை பொது நபர்களை ஒரு போலி காட்சியில் வைக்கும் நோக்கில் செய்யப்பட்ட முக மாற்றத்தின் தெளிவான அறிகுறிகளாகும்.
Conclusion:
எனவே, இந்தப் படங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்றும், ராகுல் காந்தி எப்ஸ்டீனுடன் புகைப்படம் எடுக்கப்படவில்லை என்றும் நியூஸ்மீட்டர் முடிவு செய்துள்ளது.