Fact Check: இந்து வாடிக்கையாளர்களுக்கு பிரியாணியுடன் கருத்தடை மாத்திரையை கலந்து விற்பதாக மத விரோதத்தை வளர்க்கும் பொய் பிரச்சாரம்
கோவையின் ஹோட்டலில் இந்துக்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்து பொய்யான பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
By Neelambaran A Published on 22 Feb 2025 12:43 PM IST
Claim: இந்து வாடிக்கையாளர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை கலந்து விற்கும் கோவை இஸ்லாமிய கடை
Fact: பரவும் புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இது பொய்யான தகவல் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
கோவையில் செயல்படும் ஹோட்டல் ஒன்றின் நான்கு புகைப்படங்களை பகிர்ந்து அந்நிறுவனம் இந்துக்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணியை விற்பதாக சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
இந்து மக்கள் தொகையை குறைக்க இவ்வாறு செய்வதாக சமூக வலைதள பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.
‘கோவையில் மாஷா அல்லாஹ் என்ற துரித உணவகம் பிரியாணி சமைப்பதற்காக இரண்டு அண்டாக்களை ஒன்று இந்துக்களுக்காகவும் மற்றொன்று இஸ்லாமியர்களுக்காகவும் பயன்படுத்துகிறது. இந்துக்களுக்கு வழங்கப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளை கலந்து இந்து மக்கள் தொகை குறைக்கலாம் என்பது அவர்களது எண்ணம்’, என பதிவிடப்பட்டுள்ளது.
😥कोयम्बटूर में "माशा अल्लाह" नाम से फ़ास्ट फ़ूड बेचने वाला मुल्ला 2 बर्तनों में बिरियानी पकाता था.
— विनय_सोनी_अयोध्यावासी (@AYODHYAVSIVINAY) January 2, 2022
एक मुस्लिमों के लिए और एक हिन्दुओं के लिए।
हिन्दुओं के बर्तन में लड़के व लड़कियों को नपुंसक बनाने की टेबलेट मिलाता था ताकि हिन्दुओं की जनसंख्या वृद्धि को रोका जा सके continue.. pic.twitter.com/Wp4Nke5PVE
😥कोयम्बटूर में "माशा अल्लाह" नाम से फ़ास्ट फ़ूड बेचने वाला मुल्ला 2 बर्तनों में बिरियानी पकाता था.
— विनय_सोनी_अयोध्यावासी (@AYODHYAVSIVINAY) January 2, 2022
एक मुस्लिमों के लिए और एक हिन्दुओं के लिए।
हिन्दुओं के बर्तन में लड़के व लड़कियों को नपुंसक बनाने की टेबलेट मिलाता था ताकि हिन्दुओं की जनसंख्या वृद्धि को रोका जा सके continue.. pic.twitter.com/Wp4Nke5PVE
Fact Check:
பதிவுகளில் காணப்படும் புகைப்படங்கள் பழையதும் ஒன்று கொண்டு சம்பந்தமில்லாததும் ஆகும். மத பிரிவினையை தூண்டும் விதமாக தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படம் 1:
பிஜுனூர் காவல்துறையின் எக்ஸ் கணக்கில் ஜூலை 2019 ஆம் ஆண்டு இதே புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறை ஒரு மதராசாவை சோதனை செய்து சட்டவிரோதமான ஆயுதங்களை கைப்பற்றி ஆறு நபர்களை கைது செய்தது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாவது இந்த புகைப்படம் தான்.
थाना शेरकोट @bijnorpolice द्वारा मदरसे में अवैध शस्त्रों की तस्करी करते 06 अभियुक्तगण 01 पिस्टल, 04 तमंचे व भारी मात्रा में कारतूसों सहित गिरफ्तार। #uppolice @Uppolice @adgzonebareilly @digmoradabad @News18India pic.twitter.com/WDj3kkBfIu
— Bijnor Police (@bijnorpolice) July 11, 2019
புகைப்படம் 2:
இலங்கை செய்தித்தாள் ஆன the daily mirror 2019 மே மாதம் இதே புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சிறப்பு படை போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகளை குழம்போ நகரில் இருந்து கைப்பற்றியதாகவும் அதன் மதிப்பு ரூபாய் 4 மில்லியன்கள் எனவும் ஒரு தந்தையின் மகனையும் கைது செய்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. வைரலாகும் புகைப்படம் இதுவே.
புகைப்படம் 3:
ஒரு youtube வீடியோவில் தமிழில் புகைப்படமாக இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ 30 பேருக்கு தம் பிரியாணி தயாரிப்பது எப்படி என விளக்குகிறது. இது ஜூலை 1 2016 பதிவேற்றம் செய்யப்பட்டு 43 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
புகைப்படம் 4:
ஏற்கனவே குறிப்பிட்ட படி இந்த புகைப்படம் பிஜூனூர் காவல்துறையால் நடத்தப்பட்ட மதராசா சோதனையின் போது எடுக்கப்பட்டது. காவல்துறை அலுவலர்களுடன் நடந்து வரும் இருவர் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
நான்கு புகைப்படங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதவை என்பது மட்டுமல்ல, கோவையில் கருத்தடை மருந்து கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்கும் கடை என்பதும் தவறான பிராசாரமாகும்.
மேலும் கோவையில் இது போன்ற ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. பதிவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதே பதிவு 2020ம் ஆண்டிலும் வைரான நிலையில், அப்போதும் கோவை மாநகர காவல்துறை இது பொய்யான தகவல் என செய்தி வெளியிட்டது.
Don’t spread fake news. Be responsible user of social media. No one should believe this tweet handle as it is spreading fake news. CCP is working to trace this handle.
— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) March 2, 2020
நம் தேடலில், இந்து வாடிக்கையாளர்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்து பிரியாணி விற்கும் கடை என்ற பிரச்சாரம் பொய் என்பதை கண்டறிய முடிந்தது.