காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடுகளில் தனது பெயரை ராகுல் ராஜிவ் பெரோஸ் என்று பயன்படுத்துவதாகக் கூறி சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Sam Pitroda என்ற எக்ஸ் பயனர் 2023ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் "Learning to Listen in the 21st Century" என்ற தலைப்பில் ராகுல் காந்தி ஆற்றிய சிறந்த சொற்பொழிவின் சில புகைப்படங்கள்” என்று வைரலாகும் அதே புகைப்படத்துடன் ஒரு புகைப்படத் தொகுப்பை பதிவிட்டிருந்தார்.
அதில், அவர் நிற்கும் இடத்தில் இருக்கும் மேசையில் உள்ள பெயர் பலகையில் எந்தப் பெயரும் எழுதப்படவில்லை என்று தெரியவந்தது. மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை குறித்த காணொலியை TIMES NOW ஊடகம் 2023ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதிலும், ராகுல் காந்தி மேசையில் உள்ள பெயர் பலகையில் எந்தப் பெயரும் இடம்பெறவில்லை என்று தெரிய வருகிறது.
இரு புகைப்படங்களின் ஒப்பீடு
Conclusion:
முடிவாக, நம் தேடலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்றால் தனது பெயரை ராகுல் ராஜிவ் பெரோஸ் என்று குறிப்பிடுவதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.