Fact Check: சைப்ரஸ் நாட்டில் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கியவர் அந்நாட்டு எம்பியா? உண்மை அறிக

பிரதமர் நரேந்திர மோடியின் காலைத் தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali
Published on : 5 Sept 2025 8:00 PM IST

Fact Check: சைப்ரஸ் நாட்டில் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கியவர் அந்நாட்டு எம்பியா? உண்மை அறிக
Claim:சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கியதாக காட்டும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது‌‌. மோடியின் காலை தொட்டு வணங்கிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல, அவர் நகர்மன்ற உறுப்பினர்

சைப்ரஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கும் காட்சி பதிவாகியுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் பிரதமர் மோடியின் காலில் விழுந்த பெண் நிக்கோசியா நகர்மன்ற உறுப்பினர் என்று தெரியவந்தது.

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜூன் 16ஆம் தேதி Times of India “பிரதமரின் சைப்ரஸ் பயணத்தின் போது நிக்கோசியா கவுன்சில் உறுப்பினர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்கினார்” என்ற தலைப்பில் வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.


Times of Indiaவில் வெளியிட்டுள்ள செய்தி

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சைப்ரஸ் பயணத்தின் போது, நிக்கோசியாவின் கவுன்சில் உறுப்பினரான Michaela Kythreoti Mhlapa, மோடியின் கால்களைத் தொட்டு தனது மரியாதையை வெளிப்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Doordarshan ஊடகமும் அதே தேதியில் வெளியிட்டுள்ளது. அதிலும், மோடியின் காலை தொட்டு வணங்கியவர் நிக்கோசியாவின் கவுன்சில் உறுப்பினர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் ஆதாரங்களைக் கொண்டு முதற்கட்டமாக அப்பெண் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்று தெரியவந்தது.


Nicosia municipality இணையதளம்

தொடர்ந்து, Michaela Kythreoti Mhlapa குறித்து தேடிய போது, இவர் நிக்கோசியா நகர்மன்றத்தின் உறுப்பினர் என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சைப்ரஸ் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி Attalides Alexandra என்பவரே நிக்கோசியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்றும் தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக சைப்ரஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களை தொட்டு வணங்கியதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அதில் இருப்பவர் நிக்கோசியா நகர்மன்றத்தின் உறுப்பினர் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படுகிறது.

Claim Review:பிரதமர் நரேந்திர மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் சைப்ரஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று வைரலாகும்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது‌‌. மோடியின் காலை தொட்டு வணங்கிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல, அவர் நகர்மன்ற உறுப்பினர்
Next Story